search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    ஆண்டிப்பட்டி அருகே கேரளாவுக்கு வேலைக்கு சென்ற தொழிலாளி மாயம்

    கேரளாவுக்கு வேலைக்கு சென்ற தொழிலாளி மாயமானதை தொடர்ந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகில் உள்ள கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்தவர் செல்லபாண்டி(44). இவருக்கும் தங்கம்மள்புரத்தை சேர்ந்த மகாராஜன் மகள் சித்ரா என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கேரளாவுக்கு வேலைக்கு செல்வதாக கூறிச்சென்றார். அவ்வப்போது தனது வீட்டிற்கு வந்து மகன், மகளை பார்த்து சென்றார்.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேலைக்கு சென்ற செல்லபாண்டி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் இணைப்பும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது அண்ணன் ராமராஜ் விசாரித்தபோது சரியான பதில் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த ராமராஜ் கடமலைக்குண்டு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×