என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சையில் 10-வது நாளாக முஸ்லிம்கள் போராட்டம்
Byமாலை மலர்25 Feb 2020 9:18 AM GMT (Updated: 25 Feb 2020 9:18 AM GMT)
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை கண்டித்து தஞ்சையில் முஸ்லிம்களின் தொடர் போராட்டம் இன்று 10-வது நாளாக நீடிக்கிறது.
தஞ்சாவூர்:
குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தை தெருவில் உள்ள பள்ளிவாசல் முன்பு கடந்த 9 நாட்களாக முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இடைவிடாது நடந்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று ஏராளமான முஸ்லிம்கள் நோன்பு கடைபிடித்தனர். பின்னர் மாலையில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரவு முழுவதும் போராட்டம் தொடர்ந்தது.
இன்று அது 10 நாளாக நீடித்தது. போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து பேசினர். அப்போது சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றனர். இதனால் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தை தெருவில் உள்ள பள்ளிவாசல் முன்பு கடந்த 9 நாட்களாக முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இடைவிடாது நடந்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று ஏராளமான முஸ்லிம்கள் நோன்பு கடைபிடித்தனர். பின்னர் மாலையில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரவு முழுவதும் போராட்டம் தொடர்ந்தது.
இன்று அது 10 நாளாக நீடித்தது. போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து பேசினர். அப்போது சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றனர். இதனால் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X