என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழனியில் 3-வது நாளாக இஸ்லாமியர்கள் தர்ணா போராட்டம்
Byமாலை மலர்18 Feb 2020 12:01 PM GMT (Updated: 18 Feb 2020 12:01 PM GMT)
சென்னை வண்ணாரபேட்டையில் தடியடி நடத்திய காவல் துறையை கண்டித்து பழனியில் 3-வது நாளாக இஸ்லாமியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனி:
சென்னை வண்ணாரபேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையை கண்டித்தும், குடியுரிமை திருத்தச்சட்டத்தை ரத்து செய்யக்கோரியும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பழனி சின்ன பள்ளிவாசல் முன்பாக ஆண்கள், பெண்கள் என 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சாலையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் கடைவீதியின் இருபுறமும் போலீசார் தடுப்புக்களை அமைத்தனர். பின்னர் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தர்ணாவை கைவிட்டனர்.
அதைத் தொடர்ந்து நேற்று சின்ன பள்ளிவாசல் உள்பகுதியில் தர்ணாவை தொடர்ந்தனர். மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு கலைந்து செல்வதாக தெரிவித்த நிலையில் இரவு நீண்ட நேரமாகியும் பள்ளிவாசல் முன்பு ஏராளமான பெண்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். இன்று 3-வது நாளாக தர்ணா போராட்டம் நடைபெற்றது.
சென்னை வண்ணாரபேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையை கண்டித்தும், குடியுரிமை திருத்தச்சட்டத்தை ரத்து செய்யக்கோரியும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பழனி சின்ன பள்ளிவாசல் முன்பாக ஆண்கள், பெண்கள் என 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சாலையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் கடைவீதியின் இருபுறமும் போலீசார் தடுப்புக்களை அமைத்தனர். பின்னர் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தர்ணாவை கைவிட்டனர்.
அதைத் தொடர்ந்து நேற்று சின்ன பள்ளிவாசல் உள்பகுதியில் தர்ணாவை தொடர்ந்தனர். மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு கலைந்து செல்வதாக தெரிவித்த நிலையில் இரவு நீண்ட நேரமாகியும் பள்ளிவாசல் முன்பு ஏராளமான பெண்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். இன்று 3-வது நாளாக தர்ணா போராட்டம் நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X