என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை அருகே லாரி மோதி மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற வாலிபர் பலி
Byமாலை மலர்9 Feb 2020 5:21 PM GMT (Updated: 9 Feb 2020 5:21 PM GMT)
மதுரை அருகே நடந்த விபத்தில் லாரி மோதி மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற வாலிபர் பலியானார்.
அலங்காநல்லூர்:
அலங்காநல்லூர் அருகே உள்ள மிளகரணையைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் நாகராஜ் (வயது 18). ஐ.டி.ஐ. படித்து முடித்து விட்டு மோல்டிங் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று இரவு இவர் மோட்டார் சைக்கிளில் சிக்கந்தர் சாவடியில் இருந்து அலங்காநல்லூர் நோக்கிச் சென்ற பைக்கின் பின் சீட்டில் அன்பரசு என்ற 15 வயது சிறுவன் அமர்ந்திருந்தான்.
சிக்கந்தர் சாவடி அருகில் சென்ற போது பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நாகராஜ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அன்பரசு காயங்களுடன் உயிர் தப்பினார். அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X