search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ராஜாக்கமங்கலத்தில் படுக்கை அறையில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

    ராஜாக்கமங்கலம் அருகே படுக்கை அறையில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    ராஜாக்கமங்கலம் அருகே காரவிளையை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவரது மகன் விவேக் (வயது 28).

    இவர் அந்த பகுதியில் உள்ள பால் பண்ணையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு ராஜலிங்கம் மனைவி மற்றும் மகளுடன் உறவினர் வீட்டு கிரகபிரவேசத்திற்கு சென்றிருந்தார். வீட்டில் விவேக் மட்டும் தனியாக இருந்தார்.

    வழக்கமாக விவேக் அதிகாலையில் வேலைக்கு சென்றுவிடுவார். வீட்டில் யாரும் இல்லாததால் இன்று காலை 5 மணி அளவில் விவேக்கின் உறவினர் ஒருவர் அவரை எழுப்பி விட்டு வீட்டிற்கு சென்றார். சிறிது நேரம் கழித்து பார்த்த போதும் விவேக் வேலைக்கு செல்லவில்லை. அவரது மோட்டார் சைக்கிள் வீட்டின் வெளியே நின்றுகொண்டிருந்தது.

    இதனால் மீண்டும் அவரது உறவினர் விவேக் வீட்டிற்கு வந்தார். அப்போது படுக்கை அறையில் விவேக் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்து அவர் கூச்சலிட்டார். இதனால் அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

    இதுகுறித்து விவேக்கின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராஜாக்கமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய விவேக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விவேக்கின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் திரண்டிருந்தனர்.
    Next Story
    ×