search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    திருச்சுழி அருகே இன்று விபத்து - 2 பேர் பலி

    திருச்சுழி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சமையல் தொழிலாளிகள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள திருச்சுழியைச் சேர்ந்தவர் பழனி. இவர் விசே‌ஷ நிகழ்ச்சிகளுக்கு சமையல் வேலை செய்து வந்தார்.

    இன்று காலை பழனியும், புலிக்குறிச்சியைச் சேர்ந்த பாக்கியம் என்பவரும் சமையல் வேலை செய்வதற் காக கேத்த நாயக்கன் பட்டிக்கு மோட்டார் சைக்கி ளில் புறப்பட்டனர்.

    பள்ளிமடம் மருத்துவர் காலனி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டுச் சென்றது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பழனி, பாக்கியம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்த திருச்சுழி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    பள்ளிமடம் மருத்துவர் காலனி மெயின்ரோட்டில் இது போன்று தொடர் விபத்துகள் நடந்து வருகின்றன. இதில் இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

    விபத்தை தடுக்க இந்தப் பகுதியில் வேகத்தடை, பேரி கார்டு அமைக்க வேண்டு மென அந்தப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இனியாவது மெத்தனம் காட்டாமல் விபத்து பகுதிகளில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×