search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    வந்தவாசி அருகே நடுரோட்டில் மூதாட்டி மயங்கி மரணம்

    வந்தவாசி அடுத்த கீழ்புத்தூர் பஸ் ஸ்டாப்பில் அடையாளம் தெரியாத மூதாட்டி மயங்கி பரிதாபமாக இறந்தார். அவர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த கீழ்புத்தூர் கிராமத்தில் உள்ள பஸ் ஸ்டாப்பில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நேற்று மயங்கிய நிலையில் கிடந்தார்.

    அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்த கிராம நிர்வாக அலுவலர் வினோத் தமிழக அரசின் இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக மரணமடைந்தார்.

    சம்பவம் தொடர்பாக விஏஓ வினோத் பொன்னூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்இன்ஸ்பெக்டர் சுந்தரம் வழக்குப்பதிவு செய்து இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×