search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் பலி
    X
    பெண் பலி

    படப்பை அருகே ஆசிட்  கேன் வெடித்து பெண் பலி

    படப்பை அருகே ஆசிட்  கேன் வெடித்து பெண் பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    படப்பை:

    படப்பையை அடுத்த உள்ள  சோமங்கலம் அருகே மலைப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி சாந்தி(45). இவர்களுக்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    சாந்தி மலைப்பட்டு கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்தார். கடந்த வாரம் வேலைக்கு சென்றபோது சாலையோரமாக கிடந்த 2 ரசாயன கேனை தண்ணீர் பிடித்து வைப்பதற்காக வீட்டிற்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

    ஒரு கேன் காலியாக இருந்ததால் அதனை எளிதாக வெட்டியுள்ளார். மற்றொரு கேனில் ரசாயனம் போன்ற திரவம் இருந்தது. அதனை வெளியே ஊற்ற சாந்தி முயற்சி செய்தார்.

    அப்போது திடீரென கேன் வெடித்து சிதறியது. இதில் பலத்த காயமடைந்த சாந்தி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். சோமங்கலம் போலீசார் சாந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அபாயகரமான ஆசிட் ரசாயனத்தை சாலையோரமாக வீசி சென்றது யார்? அதனை எங்கிருந்து கொண்டு வந்தார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×