என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை பெரியகோவிலை சுற்றியுள்ள அகழியை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்
Byமாலை மலர்14 Jan 2020 10:11 AM GMT (Updated: 14 Jan 2020 10:11 AM GMT)
கும்பாபிஷேகத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலை சுற்றியுள்ள அகழியை சுத்தப்படுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரியகோவிலில் அடுத்த மாதம் 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனையொட்டி கலசங்கள் சுத்தப்படுத்தும் பணி, கோபுரங்கள் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் தொன்மை மாறாமல் நடந்து வருகிறது. அனைத்து பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளன. அந்த வகையில் பெரிய கோவிலை சுற்றியுள்ள அகழியை சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து முதற்கட்டமாக பெரியகோவிலை சுற்றியுள்ள அகழி கரையில் தற்காலிக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டன. கும்பாபிஷேகத்தை காண வரும் பக்தர்கள் இந்த அகழியில் விழாதவாறு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலையில் அகழியை சுத்தப்படுத்தி அழகுப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணியில் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பணி மேற்கொண்டனர். அகழியில் உள்ள முட்புதர்கள், குப்பைகளை அகற்றினர். முட்செடிகள் வெட்டி அப்புறப்படுத்தபட்டன. தொடர்ந்து பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
தஞ்சை பெரியகோவிலில் அடுத்த மாதம் 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனையொட்டி கலசங்கள் சுத்தப்படுத்தும் பணி, கோபுரங்கள் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் தொன்மை மாறாமல் நடந்து வருகிறது. அனைத்து பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளன. அந்த வகையில் பெரிய கோவிலை சுற்றியுள்ள அகழியை சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து முதற்கட்டமாக பெரியகோவிலை சுற்றியுள்ள அகழி கரையில் தற்காலிக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டன. கும்பாபிஷேகத்தை காண வரும் பக்தர்கள் இந்த அகழியில் விழாதவாறு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலையில் அகழியை சுத்தப்படுத்தி அழகுப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணியில் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பணி மேற்கொண்டனர். அகழியில் உள்ள முட்புதர்கள், குப்பைகளை அகற்றினர். முட்செடிகள் வெட்டி அப்புறப்படுத்தபட்டன. தொடர்ந்து பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X