என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் லாரியுடன் காவலில் இருந்த டிரைவர் தப்பி ஓட்டம்
Byமாலை மலர்6 Jan 2020 11:26 AM GMT (Updated: 6 Jan 2020 11:26 AM GMT)
ஒரத்தநாடு அருகே போலீஸ் நிலையத்தில் திருட்டு மணல் லாரியுடன் காவலில் இருந்த டிரைவர் தப்பி ஓடிய சம்பவம் போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஓரத்தநாடு:
ஒரத்தநாடு சப்- இன்ஸ்பெக்டர் விஜய கிருஷ்ணன் நேற்று நள்ளிரவு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது ஒரத்தநாடு டவுன் பகுதியில் அதிகாலை 2 மணியளவில் வேகமாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் அனுமதியின்றி மணல் கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து லாரி மற்றும் டிரைவரை ஒரத்தநாடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார். பின்னர் லாரியை அங்கு நிறுத்திவிட்டு டிரைவரை போலீஸ் நிலையத்தில் காவலில் வைத்துவிட்டு அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டிற்கு சென்று விட்டாராம்.
பின்னர் மீண்டும் காலை 5.30 மணியளவில் போலீஸ் நிலையத்திற்கு வந்த போது காவலில் இருந்த டிரைவர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட லாரியை காணவில்லையாம். லாரி மற்றும் டிரைவர் மாயம் ஆனதை கண்டு அதிர்ச்சியடைந்த சப்-இன்ஸ்பெக்டர் விஜய கிருஷ்ணன் போலீஸ் நிலையத்திற்கு எதிரில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி காமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை செய்து வருகிறார்.
ஒரத்தநாடு சப்- இன்ஸ்பெக்டர் விஜய கிருஷ்ணன் நேற்று நள்ளிரவு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது ஒரத்தநாடு டவுன் பகுதியில் அதிகாலை 2 மணியளவில் வேகமாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் அனுமதியின்றி மணல் கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து லாரி மற்றும் டிரைவரை ஒரத்தநாடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார். பின்னர் லாரியை அங்கு நிறுத்திவிட்டு டிரைவரை போலீஸ் நிலையத்தில் காவலில் வைத்துவிட்டு அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டிற்கு சென்று விட்டாராம்.
பின்னர் மீண்டும் காலை 5.30 மணியளவில் போலீஸ் நிலையத்திற்கு வந்த போது காவலில் இருந்த டிரைவர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட லாரியை காணவில்லையாம். லாரி மற்றும் டிரைவர் மாயம் ஆனதை கண்டு அதிர்ச்சியடைந்த சப்-இன்ஸ்பெக்டர் விஜய கிருஷ்ணன் போலீஸ் நிலையத்திற்கு எதிரில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி காமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை செய்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X