search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரிகள் நேருக்கு நேர் மோதல்
    X
    லாரிகள் நேருக்கு நேர் மோதல்

    ஒட்டன்சத்திரத்தில் லாரிகள் நேருக்கு நேர் மோதி 2 டிரைவர்கள் உயிரிழப்பு

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் டிரைவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
    ஒட்டன்சத்திரம்:

    சேலம் மாவட்டம் சிவகிரி பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன்(23) லாரி டிரைவர். இவர் கோவையில் இருந்து மதுரைக்கு இரும்பு கம்பிகளை லாரியில் ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அதேபோல் கோவையைச் சேர்ந்த மணிகண்டன்(29) என்பவர் கன்னியாகுமரியிலிருந்து பால் லாரியில் கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    நள்ளிரவு ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மா பட்டி அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக இரு லாரிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் லாரிகளின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    இதில் லாரிகளை ஓட்டிவந்த டிரைவர்கள் பிரபாகரன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த அம்பிளிக்கை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து லாரியின் இடிபாடுகளுக்கு சிக்கிக்கொண்ட டிரைவர்களின் உடல்களை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


    Next Story
    ×