என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து - 7 பேர் படுகாயம்
Byமாலை மலர்31 Dec 2019 8:11 AM GMT (Updated: 31 Dec 2019 8:11 AM GMT)
திருமங்கலம் அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் பலத்த காயமடைந்த 7 பேர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
திருமங்கலம்:
திருமங்கலம் அருகே மறவன்குளம் 4 வழிச்சாலையில் இன்று அதிகாலை கனரக லாரி வந்து கொண்டிருந்தது. அதனை திருநெல்வேலியைச் சேர்ந்த டிரைவர் ஞானம் (வயது 27) ஓட்டி வந்தார்.
திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு சென்ற அந்த லாரியில் கலவை எந்திரம் ஏற்றப்பட்டிருந்தது.
அதிகாலை 5 மணியளவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரை தாண்டி எதிர்த்திசையில் சென்று கவிழ்ந்தது.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் திருமங்கலம் நகர் போலீசார் விரைந்து சென்று லாரியில் வந்த ஆந்திராவைச் சேர்ந்த பாதம்பிரசாத், ராஜேஷ் உள்பட காயமடைந்த 7 பேரையும் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்களில் பாதம் பிரசாத், ராஜேஷ் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து காரணமாக அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருமங்கலம் அருகே மறவன்குளம் 4 வழிச்சாலையில் இன்று அதிகாலை கனரக லாரி வந்து கொண்டிருந்தது. அதனை திருநெல்வேலியைச் சேர்ந்த டிரைவர் ஞானம் (வயது 27) ஓட்டி வந்தார்.
திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு சென்ற அந்த லாரியில் கலவை எந்திரம் ஏற்றப்பட்டிருந்தது.
அதிகாலை 5 மணியளவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரை தாண்டி எதிர்த்திசையில் சென்று கவிழ்ந்தது.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் திருமங்கலம் நகர் போலீசார் விரைந்து சென்று லாரியில் வந்த ஆந்திராவைச் சேர்ந்த பாதம்பிரசாத், ராஜேஷ் உள்பட காயமடைந்த 7 பேரையும் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்களில் பாதம் பிரசாத், ராஜேஷ் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து காரணமாக அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X