என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரத்தநாட்டில் லாட்டரி சீட்டு விற்ற முதியவர் கைது
Byமாலை மலர்16 Dec 2019 10:27 AM GMT (Updated: 16 Dec 2019 10:27 AM GMT)
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் லாட்டரி சீட்டு விற்ற முதியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஒரத்தநாடு:
தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் தடையை மீறி சட்டவிரோதமாக விற்பனை நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலமாக இந்த லாட்டரி சீட்டுகள் விற்பனை படுஜோராக நடக்கிறது. தற்போது இந்த லாட்டரி சீட்டால் விழுப்புரத்தில் அருண்என்பவர் குடும்பத்துடன் தற்கொலை செய்துள்ளார். இதனால் தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பவர்களை போலீசார் கைது செய்துவருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் ஒரத்தநாடு அல்லிநகர் 2ம்தெருவை சேர்ந்த யாகத்அலி (வயது 68) என்பவர் ஒரத்தநாடு டவுன்பகுதியில் உள்ள ஒருகடையில் ஆன்லைன் மூலம் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஒரத்தநாடு சப்-இன்ஸ்பெக்டர் விஜயகிருஷ்ணா சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது அங்கு லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து வெளிமாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
பின்னர் ஒரத்தநாடு நீதிபதி வேலுமயில் ஆஜர்படுத்தி யாகத்அலியை 15 நாட்கள் சிறையில் அடைத்தனர்.
தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் தடையை மீறி சட்டவிரோதமாக விற்பனை நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலமாக இந்த லாட்டரி சீட்டுகள் விற்பனை படுஜோராக நடக்கிறது. தற்போது இந்த லாட்டரி சீட்டால் விழுப்புரத்தில் அருண்என்பவர் குடும்பத்துடன் தற்கொலை செய்துள்ளார். இதனால் தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பவர்களை போலீசார் கைது செய்துவருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் ஒரத்தநாடு அல்லிநகர் 2ம்தெருவை சேர்ந்த யாகத்அலி (வயது 68) என்பவர் ஒரத்தநாடு டவுன்பகுதியில் உள்ள ஒருகடையில் ஆன்லைன் மூலம் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஒரத்தநாடு சப்-இன்ஸ்பெக்டர் விஜயகிருஷ்ணா சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது அங்கு லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து வெளிமாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
பின்னர் ஒரத்தநாடு நீதிபதி வேலுமயில் ஆஜர்படுத்தி யாகத்அலியை 15 நாட்கள் சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X