என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாரிமுனை சந்திப்பு நடைபாதையில் இருந்த அம்மன் கோவில் அகற்றம்
Byமாலை மலர்12 Dec 2019 10:22 AM GMT (Updated: 12 Dec 2019 10:22 AM GMT)
பாரிமுனை சந்திப்பு நடைபாதையில் இருந்த அம்மன் கோவிலை மாநகராட்சி அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றினார்கள்.
ராயபுரம்:
பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் ரோடு - ஆர்மேனியன் தெரு சந்திப்பில் உள்ள நடைபாதையில் அம்மன் கோவில் ஒன்று இருந்தது.
10 ஆண்டுகளாக இங்கு இருந்த அந்த கோவிலை தனியார் ஒருவர் பராமரித்து வந்தார். இது மக்களுக்கு இடையூராக இருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் பொதுநலவழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அந்த கோவிலை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை மாநகராட்சி அதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.
கோர்ட்டு உத்தரவுப்படி அந்த கோவில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில் இடிக்கப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் கோவிலை இடித்து அகற்றினார்கள்.
கோவில் இடிக்கப்படுவதையொட்டி, அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். நீண்ட நாட்களாக அந்த பகுதியில் இருந்த கோவில் இடித்து அகற்றப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் ரோடு - ஆர்மேனியன் தெரு சந்திப்பில் உள்ள நடைபாதையில் அம்மன் கோவில் ஒன்று இருந்தது.
10 ஆண்டுகளாக இங்கு இருந்த அந்த கோவிலை தனியார் ஒருவர் பராமரித்து வந்தார். இது மக்களுக்கு இடையூராக இருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் பொதுநலவழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அந்த கோவிலை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை மாநகராட்சி அதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.
கோர்ட்டு உத்தரவுப்படி அந்த கோவில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில் இடிக்கப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் கோவிலை இடித்து அகற்றினார்கள்.
கோவில் இடிக்கப்படுவதையொட்டி, அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். நீண்ட நாட்களாக அந்த பகுதியில் இருந்த கோவில் இடித்து அகற்றப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X