என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது
Byமாலை மலர்12 Dec 2019 5:54 AM GMT (Updated: 12 Dec 2019 9:44 AM GMT)
திருச்சியில் முதல் நடவடிக்கையாக குழந்தைகள் ஆபாச வீடியோவை வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி:
அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஒரு அறிக்கையை அனுப்பியிருந்தது. அதில், குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள், படங்கள் நிறைய பார்ப்பவர்களின் பட்டியலில் தமிழகம் இருப்பதாக கூறியிருந்தது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து தமிழக போலீசாருக்கு அந்த அறிக்கை அனுப்பப்பட்டது.
தமிழகத்தில் யாரெல்லாம் ஆபாச படங்களை பார்க்கிறார்கள் என்ற விசாரணையை நடத்தவும் முடிவு செய்தது. இது தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
அதில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள், வீடியோக்களை பார்ப்பது சட்டப்படி குற்றம். அவைகளை செல்போன்களிலும், லேப்-டாப்களிலும் வைத்திருப்பதும், அதை டவுன்லோடு செய்வதும் சட்டப்படி குற்றம். அப்படி மீறி செய்பவர்கள் போக்சோவில் கைதாவார்கள் என்றும், அவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை உண்டு என்றும் தெரிவித்தார்.
அதற்கேற்றார்போல் நாடு முழுவதும் சமீப காலமாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் பலர் கொடூரமாக கொலை செய்யப்பட்டும் உள்ளனர்.
இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழகத்திலும் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையாக ஏராளமான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பாலியல் குற்றங்களை தடுக்கும் முயற்சியில் போலீசாருடன் பொதுமக்கள் கைகோர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்தநிலையில் தமிழகத்தில் முதல் நடவடிக்கையாக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் (வயது 42) என்பவர் குழந்தைகள் ஆபாச வீடியோவை வெளியிட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை புதுத்தெருவை சேர்ந்த இவர் ஐ.டி.ஐ. படித்து விட்டு ஏ.சி. மெக்கானிக்காக தற்போது நாகர்கோவிலில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் பெரும்பாலான நேரத்தை சமூக வலைதளங்களில் செலவிடுவதையே வேலையாக கொண்டிருந்தார். அப்போது குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்தும், அதனை தனது நண்பர்கள் உள்பட பலருக்கும் பகிர்ந்து வந்துள்ளார். இதனை திருச்சியை சேர்ந்த தனிப்படை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
அப்போது கிறிஸ்டோபர் அல்போன்ஸ் தனது அடையாளத்தை மறைக்க பல்வேறு புனை பெயர்களை பயன்படுத்தி வந்துள்ளார். அதில் நிலவன், ஆதவன், வளவன் ஆகிய பெயர்களில் இந்த ஆபாச வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சமூக ஊடகவியல் போலீஸ்காரர் முத்துப்பாண்டி என்பவர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதன்பேரில் திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசார் திருச்சி வந்த கிறிஸ்டோர் அல்போன்சை இன்று அதிரடியாக கைது செய்தனர்.
அவர் மீது குழந்தைகளுக்கு எதிரான போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஒரு அறிக்கையை அனுப்பியிருந்தது. அதில், குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள், படங்கள் நிறைய பார்ப்பவர்களின் பட்டியலில் தமிழகம் இருப்பதாக கூறியிருந்தது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து தமிழக போலீசாருக்கு அந்த அறிக்கை அனுப்பப்பட்டது.
தமிழகத்தில் யாரெல்லாம் ஆபாச படங்களை பார்க்கிறார்கள் என்ற விசாரணையை நடத்தவும் முடிவு செய்தது. இது தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
அதில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள், வீடியோக்களை பார்ப்பது சட்டப்படி குற்றம். அவைகளை செல்போன்களிலும், லேப்-டாப்களிலும் வைத்திருப்பதும், அதை டவுன்லோடு செய்வதும் சட்டப்படி குற்றம். அப்படி மீறி செய்பவர்கள் போக்சோவில் கைதாவார்கள் என்றும், அவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை உண்டு என்றும் தெரிவித்தார்.
அதற்கேற்றார்போல் நாடு முழுவதும் சமீப காலமாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் பலர் கொடூரமாக கொலை செய்யப்பட்டும் உள்ளனர்.
இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழகத்திலும் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையாக ஏராளமான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பாலியல் குற்றங்களை தடுக்கும் முயற்சியில் போலீசாருடன் பொதுமக்கள் கைகோர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்தநிலையில் தமிழகத்தில் முதல் நடவடிக்கையாக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் (வயது 42) என்பவர் குழந்தைகள் ஆபாச வீடியோவை வெளியிட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை புதுத்தெருவை சேர்ந்த இவர் ஐ.டி.ஐ. படித்து விட்டு ஏ.சி. மெக்கானிக்காக தற்போது நாகர்கோவிலில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் பெரும்பாலான நேரத்தை சமூக வலைதளங்களில் செலவிடுவதையே வேலையாக கொண்டிருந்தார். அப்போது குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்தும், அதனை தனது நண்பர்கள் உள்பட பலருக்கும் பகிர்ந்து வந்துள்ளார். இதனை திருச்சியை சேர்ந்த தனிப்படை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
அப்போது கிறிஸ்டோபர் அல்போன்ஸ் தனது அடையாளத்தை மறைக்க பல்வேறு புனை பெயர்களை பயன்படுத்தி வந்துள்ளார். அதில் நிலவன், ஆதவன், வளவன் ஆகிய பெயர்களில் இந்த ஆபாச வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சமூக ஊடகவியல் போலீஸ்காரர் முத்துப்பாண்டி என்பவர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதன்பேரில் திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசார் திருச்சி வந்த கிறிஸ்டோர் அல்போன்சை இன்று அதிரடியாக கைது செய்தனர்.
அவர் மீது குழந்தைகளுக்கு எதிரான போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X