search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கடையம் அருகே தண்ணீர் பிடிப்பதில் தகராறு- 3 பேர் கைது

    கடையம் அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கடையம்:

    கடையம் அருகே உள்ள சின்னகுமார்பட்டி பகுதி பொதுமக்களுக்கு கீழப்பாவூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு நேற்று பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த முருகன் மனைவி மல்லிகா (வயது 35) மற்றும் அப்பகுதியை சேர்ந்த வள்ளிசெல்வம் (51) தெரு நல்லியில் தண்ணீர் பிடித்து கொண்டு இருந்தனர்.

    இதில் அவர்களுக்குள் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த வள்ளி செல்வத்தின் மருமகள் சத்யா (32) மாமியாருடன் சேர்ந்து மல்லிகாவுடன் தகராறில் ஈடுபட்டார். இதில் முருகனும் சேர்ந்து கொண்டு ஒருவருக்கொருவர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

    பின்னர் இது தொடர்பாக வள்ளி செல்வம் கடையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகன், வள்ளிசெல்வம், சத்யா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
    Next Story
    ×