என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செஞ்சி அருகே முயல்வேட்டைக்கு சென்ற வாலிபர் மின் வேலியில் சிக்கி பலி
Byமாலை மலர்6 Dec 2019 9:16 AM GMT (Updated: 6 Dec 2019 9:16 AM GMT)
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே முயல்வேட்டைக்கு சென்ற வாலிபர் மின் வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கொங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜி. இவரது மகன் சரவணன் (வயது 25).
தந்தை- மகன் 2 பேரும் முயல்வேட்டையில் ஆர்வம் உள்ளவர்கள். அதன்படி நேற்று அதிகாலை 2 பேரும் கொங்கரபட்டு மேல்சேலூர் சாலை பகுதியில் முயல் வேட்டைக்கு சென்றனர்.
அந்த பகுதியில் உளுந்து பயிரில் காட்டு பன்றிகள் சேதப்படுத்துவதை தடுக்க மேல்சேலூர் கிராமத்தை சேர்ந்த பக்தவச்சலம் என்பவர் தன் நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்திருந்தார்.
அதனை கவனிக்காமல் சரவணன், மின்வேலியில் மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி அலறிதுடித்தவாறு தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த ராஜீ சத்தம் கேட்டு ஓடிவந்தார்.
சரவணன் பிணமாக கிடந்ததை பார்த்து கதறி துடித்தார்.
இது குறித்து செஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனுவாசன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்த விசாரனை நடத்தி வருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கொங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜி. இவரது மகன் சரவணன் (வயது 25).
தந்தை- மகன் 2 பேரும் முயல்வேட்டையில் ஆர்வம் உள்ளவர்கள். அதன்படி நேற்று அதிகாலை 2 பேரும் கொங்கரபட்டு மேல்சேலூர் சாலை பகுதியில் முயல் வேட்டைக்கு சென்றனர்.
அந்த பகுதியில் உளுந்து பயிரில் காட்டு பன்றிகள் சேதப்படுத்துவதை தடுக்க மேல்சேலூர் கிராமத்தை சேர்ந்த பக்தவச்சலம் என்பவர் தன் நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்திருந்தார்.
அதனை கவனிக்காமல் சரவணன், மின்வேலியில் மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி அலறிதுடித்தவாறு தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த ராஜீ சத்தம் கேட்டு ஓடிவந்தார்.
சரவணன் பிணமாக கிடந்ததை பார்த்து கதறி துடித்தார்.
இது குறித்து செஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனுவாசன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்த விசாரனை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X