search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சேலம் அருகே கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி பலி

    சேலம் அருகே நண்பர்களுடன் நீச்சல் பழக சென்ற கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சேலம்:

    சேலம் வலசையின் அருகே உள்ள தெலுங்கானூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாச மூர்த்தி. இவரது மகன் விஷால் கிருஷ்ணா (வயது 19).

    இவர் சேலத்திலுள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று காலை 3 நண்பர்களுடன் சேர்ந்து குள்ளம்பட்டி காட்டு வளவிலுள்ள ஒரு கிணற்றில் நீச்சல் கற்றுக்கொள்ள சென்றனர். அப்போது அதில் ஒருவருக்கு மட்டுமே நீச்சல் தெரியும். மற்ற 3 பேரும் விஷால் கிருஷ்ணா உள்பட 3 பேர் முதுகில் கேனை கட்டிக் கொண்டு நீச்சல் கற்றுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென விஷால் கிருஷ்ணா கட்டியிருந்த கயிறு அவிழ்ந்தது. இதில் அவர் தண்ணீரில் மூழ்கினார். இது குறித்து அவரது நண்பர்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். இது குறித்து வாழப்பாடி தீயணைப்பு வீரர்களுடன் காரிப்பட்டி போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விஷால் கிருஷ்ணாவின் உடலை மீட்டனர். அவரது உடலை பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதனர். பின்னர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×