
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே புளியங்குடி-பாம்புகோவில் சந்தை செல்லும் சாலையில் ஒரு டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. அந்த கடையை ஊழியர்கள் நேற்று இரவு வழக்கம் போல் பூட்டி விட்டு சென்றனர். இந்த நிலையில் அந்த கடை தீப்பிடித்து எரிந்து காணப்பட்டது. இதனை அப்பகுதி பொதுமக்கள் பார்த்து கடை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது டாஸ்மாக் கடையின் உள்ளே இருந்த மதுபானங்கள் மற்றும் பொருட்கள் தீயில் எரித்திருந்தது. இன்று அதிகாலை யாரோ மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் ஜன்னலை உடைத்து அதன் வழியாக உள்ளே தீ வைத்துள்ளனர். இது குறித்து ஊழியர்கள் புளியங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? எதற்காக தீ வைத்தனர் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.