என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புளியங்குடி அருகே டாஸ்மாக் கடைக்கு தீவைப்பு- மர்ம நபர்கள் அட்டூழியம்
Byமாலை மலர்4 Dec 2019 9:55 AM GMT (Updated: 4 Dec 2019 9:55 AM GMT)
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே டாஸ்மாக் கடைக்கு தீவைத்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புளியங்குடி:
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே புளியங்குடி-பாம்புகோவில் சந்தை செல்லும் சாலையில் ஒரு டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. அந்த கடையை ஊழியர்கள் நேற்று இரவு வழக்கம் போல் பூட்டி விட்டு சென்றனர். இந்த நிலையில் அந்த கடை தீப்பிடித்து எரிந்து காணப்பட்டது. இதனை அப்பகுதி பொதுமக்கள் பார்த்து கடை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது டாஸ்மாக் கடையின் உள்ளே இருந்த மதுபானங்கள் மற்றும் பொருட்கள் தீயில் எரித்திருந்தது. இன்று அதிகாலை யாரோ மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் ஜன்னலை உடைத்து அதன் வழியாக உள்ளே தீ வைத்துள்ளனர். இது குறித்து ஊழியர்கள் புளியங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? எதற்காக தீ வைத்தனர் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே புளியங்குடி-பாம்புகோவில் சந்தை செல்லும் சாலையில் ஒரு டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. அந்த கடையை ஊழியர்கள் நேற்று இரவு வழக்கம் போல் பூட்டி விட்டு சென்றனர். இந்த நிலையில் அந்த கடை தீப்பிடித்து எரிந்து காணப்பட்டது. இதனை அப்பகுதி பொதுமக்கள் பார்த்து கடை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது டாஸ்மாக் கடையின் உள்ளே இருந்த மதுபானங்கள் மற்றும் பொருட்கள் தீயில் எரித்திருந்தது. இன்று அதிகாலை யாரோ மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் ஜன்னலை உடைத்து அதன் வழியாக உள்ளே தீ வைத்துள்ளனர். இது குறித்து ஊழியர்கள் புளியங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? எதற்காக தீ வைத்தனர் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X