என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் - 95 பெண்கள் உள்பட 110 பேர் கைது
Byமாலை மலர்27 Nov 2019 6:05 PM GMT (Updated: 27 Nov 2019 6:05 PM GMT)
தஞ்சையில் சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 95 பெண்கள் உள்பட 110 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் வீராச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். துணைத்தலைவர்கள் மதியழகன், அறிவழகன், இணை செயலாளர்கள் கருணாநிதி, ஆரோக்கியமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ேபாராட்டத்தை அரசு ஊழியர் சங்க மாவட்ட ெசயலாளர் ெரங்கசாமி ெதாடங்கி ைவத்தார். மறியல் போராட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், மாவட்ட துணைத்தலைவர் சசிகலா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
போராட்டத்தில் 25 குழந்தைகளுக்கு குறைவான சத்துணவு மையத்தை மூடுவதை கைவிட வேண்டும், ஒரே பள்ளி வளாகத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையத்தை மூட கூடாது. காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் சாந்தி, தர்மசுந்தரம், இணை செயலாளர்கள் பக்கிரிசாமி, ராமாமிர்தம், மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கோதண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சோமநாதராவ் நன்றி கூறினார். இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 95 பெண்கள் உள்பட 110 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சை மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் வீராச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். துணைத்தலைவர்கள் மதியழகன், அறிவழகன், இணை செயலாளர்கள் கருணாநிதி, ஆரோக்கியமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ேபாராட்டத்தை அரசு ஊழியர் சங்க மாவட்ட ெசயலாளர் ெரங்கசாமி ெதாடங்கி ைவத்தார். மறியல் போராட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், மாவட்ட துணைத்தலைவர் சசிகலா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
போராட்டத்தில் 25 குழந்தைகளுக்கு குறைவான சத்துணவு மையத்தை மூடுவதை கைவிட வேண்டும், ஒரே பள்ளி வளாகத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையத்தை மூட கூடாது. காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் சாந்தி, தர்மசுந்தரம், இணை செயலாளர்கள் பக்கிரிசாமி, ராமாமிர்தம், மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கோதண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சோமநாதராவ் நன்றி கூறினார். இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 95 பெண்கள் உள்பட 110 பேர் கைது செய்யப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X