என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அருணாசலேஸ்வரர் கோவிலில் கட்டுப்பாட்டு அறை அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு
Byமாலை மலர்16 Nov 2019 6:12 PM GMT (Updated: 16 Nov 2019 6:12 PM GMT)
அருணாசலேஸ்வரர் கோவிலில் கட்டுப்பாட்டு அறை அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இணை ஆணையர் அலுவலகம் அருகில் சக்தி விலாஸ் மண்டபம் உள்ளது. இதில் விசேஷ நாட்கள் மற்றும் விழா நாட்களில் ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவின் போது சக்தி விலாஸ் மண்டபத்தில் போலீசார் சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த ஆண்டும் தீபத்திருவிழாவின் போது அதே இடத்தில் போலீசார் மூலம் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது. இதனால் ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெறுவதில் சிக்கல்கள் மற்றும் இடையூறுகள் ஏற்படுவதாக கோவில் இணை ஆணையர் ஞானசேகரனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.
இந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பனிந்தர்ரெட்டி, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகள், அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது கட்டுப்பாட்டு அறை அமைப்பதினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், கட்டுப்பாட்டு அறையை வேறு இடத்திற்கு மாற்ற முடியுமா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இணை ஆணையர் அலுவலகம் அருகில் சக்தி விலாஸ் மண்டபம் உள்ளது. இதில் விசேஷ நாட்கள் மற்றும் விழா நாட்களில் ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவின் போது சக்தி விலாஸ் மண்டபத்தில் போலீசார் சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த ஆண்டும் தீபத்திருவிழாவின் போது அதே இடத்தில் போலீசார் மூலம் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது. இதனால் ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெறுவதில் சிக்கல்கள் மற்றும் இடையூறுகள் ஏற்படுவதாக கோவில் இணை ஆணையர் ஞானசேகரனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.
இந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பனிந்தர்ரெட்டி, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகள், அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது கட்டுப்பாட்டு அறை அமைப்பதினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், கட்டுப்பாட்டு அறையை வேறு இடத்திற்கு மாற்ற முடியுமா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X