search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திருவையாறு அருகே கல்லூரி மாணவி தற்கொலை

    திருவையாறு அருகே கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடுவெளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவையாறு:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கடுவெளி தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலு. இவரது மகள் ஷாமிலி (வயது 21).

    இவர் தஞ்சையில் செயல்படும் தனியார் கல்லூரியில் எம்.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார். இவர் கடந்த வாரம் கல்லூரிக்கு கட்டணம் செலுத்துவதற்காக தனது தாய் புஷ்பாவிடம் ரூ.12 ஆயிரம் வாங்கி சென்றுள்ளார். அதனை அவர் தொலைத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக தாய் புஷ்பா, ஷாமிலியை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று ஷாமிலி பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி மருவூர் போலீசில் தந்தை பாலு புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கு என்ன காரணம்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த சம்பவம் கடுவெளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×