search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சோழவரம் அருகே நிலத்தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு

    சோழவரம் அருகே நிலத்தகராறில் விவசாயி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    செங்குன்றம்:

    சோழவரத்தை அடுத்த காரனோடையைச் சேர்ந்தவர் சம்பத். விவசாயி. இவருடைய தங்கை மலர். நிலத்தகராறு தொடர்பாக இவர்கள் 2 பேருக்கும் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் மோட்டார்சைக்கிளில் சென்ற சம்பத்தை அவரது தங்கை மகன் தினேஷ் தனது நண்பருடன் சேர்ந்து அரிவாளால் வெட்டினார்.

    இதனால் படுகாயம் அடைந்த சம்பத்தை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
    Next Story
    ×