என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் அடுத்த வாரம் மீண்டும் மழைக்கு வாய்ப்பு- தனியார் வானிலை மையம் தகவல்
Byமாலை மலர்9 Nov 2019 5:04 AM GMT (Updated: 9 Nov 2019 5:04 AM GMT)
‘புல்புல்’ புயல் கரையை கடக்கும் போது சென்னையில் அடுத்த வாரம் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுபெற்றது. ‘புல்புல்’ என்று பெயரிடப்பட்ட இந்த புயலால் தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வங்கக்கடலின் வடமேற்கு திசையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் நோக்கி நகர்ந்தது.
புல்புல் புயல் இன்று இரவு மேற்கு வங்காளம் மற்றும் வங்காள தேசம் இடையே கரையை கடக்கிறது. புயல் வேறு திசையை நோக்கி சென்றதால் சென்னையில் வறண்ட வானிலையை காணப்படுகிறது.
இந்த நிலையில் புல்புல் புயல் கரையை கடந்த பிறகு சென்னையில் அடுத்த வாரம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மைய இயக்குனர் கூறும் போது,
புல்புல் புயல் வலுவிழந்து கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. மேக கூட்டங்கள் உருவாகுவதற்கான அறிகுறிகள் இருக்கின்றன.
இதனால் அடுத்த வாரம் 15 அல்லது 16-ந்தேதி சென்னையில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கிறோம். அதுவரை வானிலை வறண்டு காணப்படும் என்றார். ஸ்கைமெட், வானிலை மைய தலைவர் மகேஷ் பலவத் கூறும் போது,
புயல் கரையை கடந்த பிறகு காற்றின் திசை மீண்டும் மாறி தென்மேற்கு கடலோரம் நோக்கி நகரும். அதன் மூலம் வடமேற்கு திசையில் உருவாகும் காற்றழுத்தம் காரணமாக சென்னையில் மழை பெய்யும்.
ஆனால் இந்த மழை பெரிய அளவில் இருக்காது மிதமான மழையாகவே இருக்கலாம் என்றார்.
வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுபெற்றது. ‘புல்புல்’ என்று பெயரிடப்பட்ட இந்த புயலால் தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வங்கக்கடலின் வடமேற்கு திசையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் நோக்கி நகர்ந்தது.
புல்புல் புயல் இன்று இரவு மேற்கு வங்காளம் மற்றும் வங்காள தேசம் இடையே கரையை கடக்கிறது. புயல் வேறு திசையை நோக்கி சென்றதால் சென்னையில் வறண்ட வானிலையை காணப்படுகிறது.
இந்த நிலையில் புல்புல் புயல் கரையை கடந்த பிறகு சென்னையில் அடுத்த வாரம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மைய இயக்குனர் கூறும் போது,
புல்புல் புயல் வலுவிழந்து கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. மேக கூட்டங்கள் உருவாகுவதற்கான அறிகுறிகள் இருக்கின்றன.
இதனால் அடுத்த வாரம் 15 அல்லது 16-ந்தேதி சென்னையில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கிறோம். அதுவரை வானிலை வறண்டு காணப்படும் என்றார். ஸ்கைமெட், வானிலை மைய தலைவர் மகேஷ் பலவத் கூறும் போது,
புயல் கரையை கடந்த பிறகு காற்றின் திசை மீண்டும் மாறி தென்மேற்கு கடலோரம் நோக்கி நகரும். அதன் மூலம் வடமேற்கு திசையில் உருவாகும் காற்றழுத்தம் காரணமாக சென்னையில் மழை பெய்யும்.
ஆனால் இந்த மழை பெரிய அளவில் இருக்காது மிதமான மழையாகவே இருக்கலாம் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X