என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தர்மபுரி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் 2 டாக்டர்கள் இடமாற்றம்
Byமாலை மலர்2 Nov 2019 11:13 AM GMT (Updated: 2 Nov 2019 11:13 AM GMT)
தர்மபுரி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் 2 டாக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இது தவிர மேலும் சில டாக்டர்களுக்கு இடமாற்றம் வரலாம் என்ற பீதி நிலவுகிறது.
தர்மபுரி:
சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் நேற்று தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று வேலைக்கு திரும்பினார்கள்.
தர்மபுரி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் சங்கத்தின் மாநில துணை ஒருங்கிணைப்பாளரும், காரிமங்கலத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டருமான ரங்கசாமி ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், பென்னாகரம் அரசு மருத்துவமனை டாக்டருமான வெங்கடேசன் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கும், மாநில ஒருங்கிணைப்பாளரும், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி டாக்டருமான லட்சுமி நரசிம்மன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தனர்.
தற்போது மேலும் 2 டாக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இலளிகம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் வாசுதேவன் திருவாரூர் மாவட்டத்திற்கும், ஏரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கங்காதரன் சிவகங்கைக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.
இது தவிர மேலும் சில டாக்டர்களுக்கு இடமாற்றம் வரலாம் என்ற பீதி நிலவுகிறது.
வெளி மாவட்டங்களில் இருந்து தர்மபுரிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட டாக்டர்கள் இங்கு வந்து பதவி ஏற்றுக்கொண்டனர்.
சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் நேற்று தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று வேலைக்கு திரும்பினார்கள்.
தர்மபுரி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் சங்கத்தின் மாநில துணை ஒருங்கிணைப்பாளரும், காரிமங்கலத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டருமான ரங்கசாமி ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், பென்னாகரம் அரசு மருத்துவமனை டாக்டருமான வெங்கடேசன் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கும், மாநில ஒருங்கிணைப்பாளரும், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி டாக்டருமான லட்சுமி நரசிம்மன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தனர்.
தற்போது மேலும் 2 டாக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இலளிகம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் வாசுதேவன் திருவாரூர் மாவட்டத்திற்கும், ஏரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கங்காதரன் சிவகங்கைக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.
இது தவிர மேலும் சில டாக்டர்களுக்கு இடமாற்றம் வரலாம் என்ற பீதி நிலவுகிறது.
வெளி மாவட்டங்களில் இருந்து தர்மபுரிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட டாக்டர்கள் இங்கு வந்து பதவி ஏற்றுக்கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X