search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பயிற்சி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    மதுரை:

    தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களாக கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம், பணி புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் போராட்டம் நடத்தியதால் நோயாளிகள் அவதி அடைந்தனர். இந்த நிலையில் இன்று பயிற்சி டாக்டர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.

    தமிழ்நாடு பயிற்சி டாக்டர்கள் சங்கம் சார்பில் மதுரை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பயிற்சி டாக்டர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மாவட்ட தலைவர் அறிவொளி தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். டாக்டர்களை நேரடியாக பணி நியமனம் செய்யக்கூடாது. கவுன்சிலிங் மூலம் பணி இடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
    Next Story
    ×