search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்.ஆர்.தனபாலன்
    X
    என்.ஆர்.தனபாலன்

    டாக்டர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்- என்.ஆர்.தனபாலன்

    தமிழக மக்களின் நலன் கருதியும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை காப்பாற்றுவதற்காகவும் டாக்டர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று என்.ஆர்.தனபாலன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பருவமழை பெய்து பொதுமக்கள் வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சலால் அவதிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில் டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது மனசாட்சி உள்ள எந்த ஒரு மனிதராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

    சில அரசியல் கட்சிகளின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி பொது மக்களின் உயிரோடு தாங்கள் பேரம்பேச வேண்டாம். தமிழக மக்களின் நலன் கருதியும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை காப்பாற்றுவதற்காகவும் டாக்டர்கள் தங்களின் காலவரையற்ற போராட்டத்தை திரும்ப பெற்று மக்களை காப்பாற்றும் பணியில் மீண்டும் ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×