
3-ம் நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நற்கருணை திருவிழா நடந்தது. இத்திருவிழாவில் செங்கை மறைமாவட்ட ஆயரின் பதில்குரு பாக்கிய ரெஜிஸ் தலைமை தாங்கினார்.
அதனைத்தொடர்ந்து 4-வது மற்றும் நிறைவு நாளான இன்று திருத்தூதர் பெருவிழாவுடன் ஆடம்பர தேர் பவனியும், அதனைத்தொடர்ந்து கொடியிறக்க நிகழ்வும் நடைபெறுகிறது.
இதில் பேரருட்பணி அருள் ராஜ் புனித தோமா தேசிய திருத்தலம் மற்றும் தோமையார் மறைமாவட்ட குருக்கள் கலந்து கொள்கின்றனர். இந்த ஏற்பாடுகள் அனைத்தும் பங்குதந்தை மார்ட்டின் ஜோசப் தலைமையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.