என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துடியலூர் அருகே லாரி மீது மொபட் மோதி வாலிபர் பலி
Byமாலை மலர்24 Oct 2019 10:35 AM GMT (Updated: 24 Oct 2019 10:35 AM GMT)
கோவை துடியலூர் அருகே லாரி மீது மொபட் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுண்டம்பாளையம்:
கோவை துடியலூர் அப்பநாயக்கன்பாளையம் காளியம்மாள் காலனியை சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மகன் ரூபன்வெஸ்லி (வயது 28).
இவர் கோவை திருச்சி ரோட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். ரூபன்வெஸ்லி நேற்று இரவு ஷிப்டுக்கு சென்றார்.
வேலை முடிந்ததும் இன்று காலை மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டார். வெள்ளக்கிணர் பிரிவில் சென்றபோது முன்னால் சென்ற ஒரு லாரி திடீரனெ திரும்பியது. இதில் நிலைதடுமாறி லாரி மீது மொபட் வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் மொபட் லாரிக்கு அடியில் சிக்கியது.
இந்த விபத்தில் ரூபன்வெஸ்லி அணிந்திருந்த ஹெல்மெட் நொறுங்கியது. இதனால் தூக்கி வீசப்பட்ட ரூபன்வெஸ்லியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் ரூபன்வெஸ்லி பலியானார்.
இது குறித்து தகவல் கிடைத்தும் துடியலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வாலிபரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த திண்டுக்கல்லை சேர்ந்த முருகேசன் (42) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை துடியலூர் அப்பநாயக்கன்பாளையம் காளியம்மாள் காலனியை சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மகன் ரூபன்வெஸ்லி (வயது 28).
இவர் கோவை திருச்சி ரோட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். ரூபன்வெஸ்லி நேற்று இரவு ஷிப்டுக்கு சென்றார்.
வேலை முடிந்ததும் இன்று காலை மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டார். வெள்ளக்கிணர் பிரிவில் சென்றபோது முன்னால் சென்ற ஒரு லாரி திடீரனெ திரும்பியது. இதில் நிலைதடுமாறி லாரி மீது மொபட் வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் மொபட் லாரிக்கு அடியில் சிக்கியது.
இந்த விபத்தில் ரூபன்வெஸ்லி அணிந்திருந்த ஹெல்மெட் நொறுங்கியது. இதனால் தூக்கி வீசப்பட்ட ரூபன்வெஸ்லியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் ரூபன்வெஸ்லி பலியானார்.
இது குறித்து தகவல் கிடைத்தும் துடியலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வாலிபரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த திண்டுக்கல்லை சேர்ந்த முருகேசன் (42) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X