என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரூரில் இருசக்கர மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்ட எல்.இ.டி. விளக்குகள் உடைப்பு
Byமாலை மலர்23 Oct 2019 4:45 PM GMT (Updated: 23 Oct 2019 4:45 PM GMT)
அரூரில் எல்.இ.டி. விளக்குகள் அதிக ஒளியை உமிழ்வதால் விபத்துகள் ஏற்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர் புதுப்பித்தலுக்கு வருபவர்களிடம் இதை அகற்ற கோரி அறிவுரை வழங்கினார்.
அரூர்:
தற்போது இருசக்கர மோட்டார் சைக்கிளில் எல்.இ.டி. முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலானோர் இதுபோன்ற விளக்குகளை தங்கள் வாகனங்களில் பொருத்திக் கொள்கின்றனர்.
இதுபோன்ற எல்.இ.டி. விளக்குகள் அதிக ஒளியை உமிழ்வதால் எதிரே வருபவர்களுக்கு இரண்டு நொடி பார்வை தெரியாமல் ஏற்பட்டு விபத்துகள் அதிகம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் வாகன புதுப்பித்தலுக்கு வருபவர்களிடம் எல்.இ.டி. விளக்குகளை அகற்றுமாறு அறிவுரைகளை வழங்கி வந்தார்.
இதனையடுத்து மோட்டார் வாகன அலுவலகம் முன்பு தணிக்கையில் ஈடுபட்ட போது அந்த வழியாக எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்களை நிறுத்தி வண்டி உரிமையாளர்களிடமே சுத்தியலை கொடுத்து விளக்குகளை உடைக்க சொன்னார். இதுபோல் 8 வாகனங்களின் எல்.இ.டி. விளக்குகள் உடைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X