search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    விருதுநகரில் ரூ.72 ஆயிரம் புகையிலை பொருட்கள் பதுக்கிய வாலிபர் கைது

    விருதுநகரில் ரூ.72 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    விருதுநகர்:

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சிலர் திருட்டுத்தனமாக விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விருதுநகர் சிவந்திபுரம் ஆத்துமேடு கருப்பசாமி கோவில் தெரு பகுதியில் ஒரு வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விருதுநகர் கிழக்கு போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

    அங்கிருந்த 562 பண்டல் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.72 ஆயிரத்து 175 ஆகும். அவற்றை பதுக்கியதாக சோலைசாமி (வயது34) கைது செய்யப்பட்டார்.
    Next Story
    ×