என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேராவூரணி அருகே ஆற்றில் மூழ்கி லாரி டிரைவர் பலி
Byமாலை மலர்19 Oct 2019 10:20 AM GMT (Updated: 19 Oct 2019 10:20 AM GMT)
பேராவூரணி அருகே ஆற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பேராவூரணி:
சீர்காழி அடுத்த நல்லூர் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் முருகவேல் (வயது31). இவர் லாரி வாங்கி புக்கிங் ஆபீஸ் மூலம் பேராவூரணியிலிருந்து சென்னைக்கு சரக்குகள் ஏற்றி கொண்டு போய் இறக்கி விட்டு வருவது வழக்கம்.
நேற்று அவர் மதியம் தனது நண்பர்களான ராமநாதபுரம் கருப்பசாமி மற்றும் திருவாரூர் விஜயகுமார் ஆகியோருடன் பேராவூரணி அருகே கொன்றைக்காடு மெயின் ரோட்டில் உள்ள ஆற்றில் குளிக்க சென்றார்.
லாரியை நிறுத்தி விட்டு 3 பேரும் குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக முருகவேல் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கி விட்டார்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ரெத்தினவேல் அளித்த தகவலின் படி தீயணைப்பு மீட்பு படையினர், சப்-இன்ஸ்பெக்டர் இல.அருள்குமார் ஆகியோர் விரைந்து வந்து முருகவேல் உடலை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாசில்தார் ஜெயலெட்சுமி, வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சீர்காழி அடுத்த நல்லூர் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் முருகவேல் (வயது31). இவர் லாரி வாங்கி புக்கிங் ஆபீஸ் மூலம் பேராவூரணியிலிருந்து சென்னைக்கு சரக்குகள் ஏற்றி கொண்டு போய் இறக்கி விட்டு வருவது வழக்கம்.
நேற்று அவர் மதியம் தனது நண்பர்களான ராமநாதபுரம் கருப்பசாமி மற்றும் திருவாரூர் விஜயகுமார் ஆகியோருடன் பேராவூரணி அருகே கொன்றைக்காடு மெயின் ரோட்டில் உள்ள ஆற்றில் குளிக்க சென்றார்.
லாரியை நிறுத்தி விட்டு 3 பேரும் குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக முருகவேல் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கி விட்டார்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ரெத்தினவேல் அளித்த தகவலின் படி தீயணைப்பு மீட்பு படையினர், சப்-இன்ஸ்பெக்டர் இல.அருள்குமார் ஆகியோர் விரைந்து வந்து முருகவேல் உடலை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாசில்தார் ஜெயலெட்சுமி, வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X