search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்வே பாலத்தில் இரும்பு கம்பி தொங்குவதை படத்தில் காணலாம்
    X
    ரெயில்வே பாலத்தில் இரும்பு கம்பி தொங்குவதை படத்தில் காணலாம்

    மூலகொத்தளம் ரெயில்வே சுரங்கப்பாதை பாலத்தில் இரும்பு கம்பிகள் உடைந்தது - வாகன ஓட்டிகள் அச்சம்

    மூலகொத்தளத்தில் ரெயில்வே சுரங்கப்பாதை பாலத்தில் இரும்பு கம்பிகள் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் உடனடியாக ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



    ராயபுரம்:

    கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதிகளில் இருந்து தங்கசாலை, பெரம்பூருக்கு செல்லும் பிரதான சாலையான சி.பி. சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. மேலே உள்ள பாலத்தில் ரெயில்கள் சென்றுவருகின்றன. இந்த ரெயில்வே சுரங்க பாதை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.

    பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரெயில்வே சுரங்கப்பாதை பழுதடைந்த நிலையில் உள்ளது. அதில் உள்ள கம்பிகள் அந்தரத்தில் தொங்கியபடி எந்த நேரத்திலும் இடிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சுரங்கப்பாதை சென்று வருகிறார்கள்.

    சமீபத்தில் பெய்த மழையால் நள்ளிரவில் சுரங்க பாலத்தில் இருந்து இரும்பு கம்பிகள் கீழே விழுந்துள்ளது. அதை அப்பகுதி மக்கள் அகற்றி இருக்கிறார்கள்.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர். ரெயில்வே பாலத்தில் இரும்பு கம்பிகள் ஆபத்தான நிலையில் உள்ளதால் உடனடியாக ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×