search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து

    ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற இருப்பதால் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.
    திருச்சி:

    ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற இருப்பதால் நீர்சேகரிப்பு கிணறு மற்றும் நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்ற முடியாது.

    இதன் காரணமாக ஸ்ரீரங்கம் பகுதி முழுவதும் மற்றும் ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட சஞ்சீவி நகர், தேவதானம், அரியமங்கலம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளான விறகு பேட்டை, மகாலெட்சுமி நகர், நேருஜி நகர், செந்தண்ணீர் புரம், சங்கிலியாண்டபுரம், உக்கடை, அரியமங்கலம் கிராமம், ஜெகநாதபுரம், மலையப்பநகர், ரெயில் நகர், பொன்மலை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளான முன்னாள் ராணுவத்தினர் காலனி, விவேகானந்தநகர், ஜே.கே.நகர், மேலகல்கண்டார் கோட்டை, பொன்னேரி புரம், கல்லுக்குழி, பொன் மலைப்பட்டி, மத்திய சிறைச்சாலை, சுப்பிரமணிய புரம், விமானநிலைய பகுதி, காமராஜ் நகர், செம்பட்டு, காஜாநகர், காஜாமலை, கே.சாத்தனூர், கே.கே.நகர், தென்றல் நகர், ஆனந்த் நகர், சத்யவாணி முத்துநகர், அய்யப்பநகர், கோ. அபிஷேகபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட உறையூர், மங்களாநகர், ரெயின்போ நகர், செல்வாநகர், ஆனந்தம் நகர், பாரதிநகர், புத்தூர் பகுதி, எடமலைப்பட்டி புதூர், அன்புநகர், கிருஷ்ணமூர்த்தி நகர், தொண்டைமான்நகர், கிராப்பட்டி பகுதிகளில் நாளை ஒருநாள் மட்டும் வினியோகம் ரத்து செய்யப்படுகிறது.

    இந்த தகவலை திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×