search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிகரெட் குடோன் தீ விபத்து
    X
    சிகரெட் குடோன் தீ விபத்து

    சோழவரம் அருகே சிகரெட் குடோனில் தீ விபத்து

    சோழவரம் அருகே சிகரெட் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்குன்றம்:

    சோழவரம் அருகே பண்டிகாவனூர் கிராமம் உள்ளது.

    இங்கு கடந்த 5 ஆண்டுகளாக சிகரெட் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு சிகரெட் வினியோகம் செய்யப்படுகிறது.

    இந்த குடோனில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிகரெட் பண்டல்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. காவலாளிகள் இரவு- பகலாக இந்த குடோனை பாதுகாத்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் குடோனின் ஒரு பகுதியில் புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீ கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இது குறித்து தீயணைப்பு படையினருக்கு காவலாளிகள் தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து செங்குன்றம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பொன்னேரி தீயணைப்பு நிலையங்களில் இருந்து 6 தீயணைப்பு வண்டிகள் வந்தன. 64 தீயணைப்பு படை வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து தீயணைக்கும் பணி நடந்து வருகிறது.

    தீ விபத்துக்கான காரணம் குறித்து சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×