search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமையல் எரிவாயு சிலிண்டர்கள்
    X
    சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

    சமையல் கேஸ் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம்- எண்ணெய் நிறுவனங்கள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    சமையல் கேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கில் பதிலளிக்கும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும்போது, டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க உத்தரவிடக் கோரி, சென்னை அண்ணனூரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அவர் தனது மனுவில், கேஸ் சிலிண்டரை வீடுகளுக்கு டெலிவரி செய்பவர்கள் ரசீதில் உள்ள தொகையைவிட, வீடுகளுக்கு ஏற்ப 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கூடுதலாக வசூலிப்பதாகவும், இதுகுறித்து புகார் தெரிவித்தும் எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

    சென்னை ஐகோர்ட்

    இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலிண்டர் டெலிவரி செய்யும்போது கூடுதல் கட்டணம் (டிப்ஸ்) வசூலிக்கப்படுவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என எண்ணெய் நிறுவனங்களுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

    டிப்ஸ் வசூலிக்கப்படுவதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து நவம்பர் 1-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    Next Story
    ×