search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    முதுகலை மாணவன் நீக்கம்- சென்னை பல்கலைக்கழகம் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

    முதுகலை மாணவன் நீக்கப்பட்டது தொடர்பாக சென்னை பல்கலைக்கழகம் வருகிற 24-ந் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை பல்கலைக் கழகத்தில் இதழியல் படிப்பை முடித்த பின், தத்துவ இயல் துறையில் புத்த கொள்கை முதுகலை படிப்பில் சேர்ந்த கிருபாமோகன் அண்மையில் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

    இதை எதிர்த்து அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு மனுவில், ‘உரிய கட்டணம் செலுத்தி, சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின், விதிகளை மீறியதால் சேர்க்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை என துணைவேந்தர் கடிதம் அனுப்பியதாக குறிப்பிட்டுள்ளார்.

    பல்கலைக்கழக விதிகள் எதையும் மீறாத நிலையில், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தில் உறுப்பினராக நான் இருந்ததால், என்னை பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டதாக துணைவேந்தர் பேட்டியளித்துள்ளார்.

    எனவே, என்னை பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கிய உத்தரவை ரத்து செய்து, மீண்டும் படிப்பில் சேர்க்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், மனுவுக்கு வருகிற 24-ந் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
    Next Story
    ×