search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார் திருட்டு
    X
    கார் திருட்டு

    கரூர் அருகே நிறுவனத்தின் பூட்டை உடைத்து 2 கார்கள் திருட்டு

    கரூர் அருகே நிறுவனத்தின் பூட்டை உடைத்து 2 கார்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கரூர்:

    கரூர் அருகே உள்ள வாங்கல் குப்புச்சிபாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 33). இவர், கரூர் வெண்ணெய்மலை மெயின்ரோட்டில் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது நிறுவனத்தை மோகன்ராஜ் பூட்டி சென்றார். பின்னர் நேற்று காலை வந்து பார்த்தபோது, நிறுவன ஷட்டரின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, அங்கிருந்த 2 கார்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இந்த திருட்டு சம்பவம் குறித்து வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் மோகன்ராஜ் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்களை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் கார்களை திருடி சென்ற மர்மநபர்களின் உருவம் பதிவாகியுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
    Next Story
    ×