என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![உயிரிழப்பு உயிரிழப்பு](https://img.maalaimalar.com/Articles/2019/Sep/201909031555376708_pregnant-woman-death-near-Chettipalayam_SECVPF.gif)
X
உயிரிழப்பு
செட்டிப்பாளையம் அருகே 8 மாத கர்ப்பிணி உயிரிழப்பு
By
மாலை மலர்3 Sep 2019 10:25 AM GMT (Updated: 3 Sep 2019 10:25 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
செட்டிப்பாளையம் அருகே திருமணமான 1½ வருடத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழந்ததால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
கோவை:
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கீரநத்தத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி பாரதி (வயது 22). இவர்களுக்கு கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்தநிலையில் பாரதி கர்ப்பமானார். 8 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த மாதம் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.பின்னர் பாரதி ஒத்தகால் மண்டபத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
நேற்று மதியம் அவர் வழக்கம் போல உணவு சாப்பிட்டு விட்டு சோர்வாக இருப்பதாக கூறி விட்டு தனது அறைக்கு சென்றார். சிறிது நேரத்துக்கு பின்னர் அவரது தாய் அறைக்கு சென்று பார்த்தார். அப்போது பாரதி உடல் நடுங்கியபடி மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு பாரதியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 1½ வருடத்தில் பாரதி இறந்ததால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கீரநத்தத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி பாரதி (வயது 22). இவர்களுக்கு கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்தநிலையில் பாரதி கர்ப்பமானார். 8 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த மாதம் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.பின்னர் பாரதி ஒத்தகால் மண்டபத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
நேற்று மதியம் அவர் வழக்கம் போல உணவு சாப்பிட்டு விட்டு சோர்வாக இருப்பதாக கூறி விட்டு தனது அறைக்கு சென்றார். சிறிது நேரத்துக்கு பின்னர் அவரது தாய் அறைக்கு சென்று பார்த்தார். அப்போது பாரதி உடல் நடுங்கியபடி மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு பாரதியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 1½ வருடத்தில் பாரதி இறந்ததால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)