என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை வாக்காளர்களுக்கு வாய்ப்பு- செல்போன் ஆப் மூலம் வாக்காளர் பட்டியலை திருத்தலாம்
Byமாலை மலர்31 Aug 2019 8:32 AM GMT (Updated: 31 Aug 2019 8:32 AM GMT)
சென்னையில் உள்ள வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தின் செல்போன் ஆப் மூலம் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் என அனைத்து திருத்தங்களையும் செய்துகொள்ளலாம்.
nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். இந்த இணையத்தளத்தில் வாக்காளர்கள் ஆதாரத்துடன் உரிய திருத்தங்கள் செய்யலாம். இதுதவிர வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே திருத்தம் செய்யும் வகையில், செல்போன் ஆப் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் கூறியதாவது:-
வாக்காளர்களால் பதிவு செய்யப்படும் ஆவணங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கள ஆய்வு செய்யப்படும். கள ஆய்வில் திருத்தங்கள் செய்யப்பட்டு, அக்டோபர் 15-ம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக நவம்பர் 2, 3, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் என அனைத்து திருத்தங்களையும் செய்துகொள்ளலாம்.
nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். இந்த இணையத்தளத்தில் வாக்காளர்கள் ஆதாரத்துடன் உரிய திருத்தங்கள் செய்யலாம். இதுதவிர வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே திருத்தம் செய்யும் வகையில், செல்போன் ஆப் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் கூறியதாவது:-
சென்னையைச் சேர்ந்த வாக்காளர்கள் நாளை முதல் தேர்தல் ஆணையத்தின் புதிய செயலியான NVSP App மூலம் தங்கள் வாக்காளர் அட்டைகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளலாம். இந்த செயலியில், வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் அடையாள எண்ணை உள்ளீடு செய்து, பின்னர், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் ஒன்றைக் கொண்டு திருத்தம் செய்யலாம்.
வாக்காளர்களால் பதிவு செய்யப்படும் ஆவணங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கள ஆய்வு செய்யப்படும். கள ஆய்வில் திருத்தங்கள் செய்யப்பட்டு, அக்டோபர் 15-ம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக நவம்பர் 2, 3, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X