என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எல்ஐசி-ஆயிரம் விளக்கு இடையே அண்ணாசாலையில் இருவழி போக்குவரத்து இன்று தொடங்குகிறது
Byமாலை மலர்3 Aug 2019 8:24 AM GMT (Updated: 3 Aug 2019 8:24 AM GMT)
7 ஆண்டுகளுக்கு பிறகு எல்.ஐ.சி.- ஆயிரம் விளக்கு இடையே அண்ணாசாலையில் இரு வழிப்பாதை போக்குவரத்து இன்று தொடங்குகிறது.
சென்னை:
சென்னையில் மெட்ரோ ரெயில் திட்ட பணிகளுக்காக போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த பகுதிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகிறது.
வண்ணாரபேட்டை- விமான நிலையம் வழித்தடம் அண்ணாசாலையில் சுரங்கப்பாதையாக சைதாப்பேட்டை வரை செல்கிறது.
சுரங்கப்பாதை மற்றும் எல்.ஐ.சி.-ஆயிரம் விளக்கு மெட்ரோ ரெயில் நிலையங்கள் கட்டுவதற்காக எல்.ஐ.சி.- ஆயிரம் விளக்கு இடையே அண்ணாசாலையில் கடந்த 7 வருடங்களாக ஒருவழிப்பாதை மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
எல்.ஐ.சி.யில் இருந்து டி.எம்.எஸ். செல்லும் வாகனங்கள் அனைத்தும் பேட்டர்ஸ்ரோடு, எக்ஸ்பிரஸ் அவென்யூ வழியாக ஜெமினி செல்ல வேண்டும். இதனால் காலை மற்றும் மாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கியது. இதையடுத்து அண்ணாசாலையை சீரமைத்து கடந்த ஜூன் மாதமே மெட்ரோ ரெயில் நிறுவனம் ஒப்படைக்க திட்டமிட்டு இருந்தது. ஆனால் துறை ரீதியான தாமதத்தால் தாமதமாகி வந்தது.
தற்போது சாலை சீரமைக்கப்பட்டு எல்.ஐ.சி.- ஆயிரம் விளக்கு இடையே அண்ணாசாலையில் இரு வழிப்பாதை போக்குவரத்து இன்று தொடங்குகிறது.
இனி அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம் இல்லாமல் இருவழிப்பாதையிலும் வாகனங்கள் செல்ல முடியும்.
சென்னையில் மெட்ரோ ரெயில் திட்ட பணிகளுக்காக போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த பகுதிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகிறது.
வண்ணாரபேட்டை- விமான நிலையம் வழித்தடம் அண்ணாசாலையில் சுரங்கப்பாதையாக சைதாப்பேட்டை வரை செல்கிறது.
சுரங்கப்பாதை மற்றும் எல்.ஐ.சி.-ஆயிரம் விளக்கு மெட்ரோ ரெயில் நிலையங்கள் கட்டுவதற்காக எல்.ஐ.சி.- ஆயிரம் விளக்கு இடையே அண்ணாசாலையில் கடந்த 7 வருடங்களாக ஒருவழிப்பாதை மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
எல்.ஐ.சி.யில் இருந்து டி.எம்.எஸ். செல்லும் வாகனங்கள் அனைத்தும் பேட்டர்ஸ்ரோடு, எக்ஸ்பிரஸ் அவென்யூ வழியாக ஜெமினி செல்ல வேண்டும். இதனால் காலை மற்றும் மாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கியது. இதையடுத்து அண்ணாசாலையை சீரமைத்து கடந்த ஜூன் மாதமே மெட்ரோ ரெயில் நிறுவனம் ஒப்படைக்க திட்டமிட்டு இருந்தது. ஆனால் துறை ரீதியான தாமதத்தால் தாமதமாகி வந்தது.
தற்போது சாலை சீரமைக்கப்பட்டு எல்.ஐ.சி.- ஆயிரம் விளக்கு இடையே அண்ணாசாலையில் இரு வழிப்பாதை போக்குவரத்து இன்று தொடங்குகிறது.
இனி அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம் இல்லாமல் இருவழிப்பாதையிலும் வாகனங்கள் செல்ல முடியும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X