என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
10 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணாசாலை இருவழிப்பாதை ஆகிறது
Byமாலை மலர்30 July 2019 8:02 AM GMT (Updated: 30 July 2019 8:02 AM GMT)
10 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா சாலை மீண்டும் இரு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. வருகிற 3-ந்தேதி முதல் இந்த மாற்றம் செயல்படுத்தப்பட உள்ளது.
சென்னை:
சென்னையில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை வழித்தடம் அமைப்பதற்கான பணி 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.
இதனால் அண்ணாசாலை பகுதியில், மெட்ரோ ரெயில் சுரங்கம் அமைப்பதற்காக எல்.ஐ.சி.யில் இருந்து ஸ்பென்சர் வழியாக செல்லும் அண்ணாசாலை மூடப்பட்டது. இதையடுத்து, இந்த வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள், ஜெனரல் பேட்டர்ஸ் சாலை, ஒயிட்ஸ் சாலை, எக்ஸ்பிரஸ் அவென்யூ, சத்யம் தியேட்டர் வழியாக அண்ணாசாலை சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனால் அண்ணா சாலை வழியாக செல்ல வேண்டியவர்கள் அதிக தூரம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டது. ராயப்பேட்டை மணிக்கூண்டு பகுதியில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அண்ணா மேம்பாலத்தில் இருந்து சிம்சன் நோக்கி செல்லும் எதிர்பாதை மட்டும் ஒரு வழிசாலையாக இயங்கி வந்தது.
இந்த நிலையில், அண்ணாசாலை, பகுதியில் மெட்ரோ சுரங்கம் அமைக்கும் பணி முடிந்து ரெயில்கள் இயங்கத் தொடங்கின. என்றாலும் சில இடங்களில் சாலை விரிவாக்கம் மற்றும் சீரமைப்பு பணிகள் நடந்து வந்தன.
தற்போது அந்த பணிகளும் முடிந்துவிட்டன. இதனால் 10 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா சாலை மீண்டும் இரு வழிச் சாலையாக மாற்றப்படுகிறது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நந்தனம்- அண்ணா சாலை சந்திப்பில் மெட்ரோ ரெயில் பாதை பணிகளுக்காக 2011-ம் ஆண்டு போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. பணிகள் நிறைவடைந்ததால் கடந்த 27-ந்தேதி சோதனை முறையில் மீண்டும் அண்ணா சாலையில் பழைய முறையில் போக்குவரத்து இருவழியாகவும் அனுமதிக்கப்பட்டது. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
எனவே, மீண்டும் பழைய முறைப்படி அண்ணா சாலையில் போக்குவரத்து நடைபெற உள்ளது. இதன்படி அண்ணா சாலையில் சைதாப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை வரும் அனைத்து வாகனங்களும் நந்தனம் சந்திப்பில் நேராகவும், இடதுபுறம் திரும்பி வெங்கட் நாராயணா சாலை வழியாகவும் வலது புறம் திரும்பி சேமியர்ஸ் சாலை வழியாகவும் செல்லலாம்.
வெங்கட்நாராயணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் சேமியர்ஸ் சாலையில் நேராகவும், அண்ணா சாலையில் இடது புறம், சைதாப்பேட்டைக்கு வலதுபுறமும் செல்லலாம். இதுபோல சேமியர்ஸ் சாலையில் இருந்து நேராக வெங்கட்நாராயணா சாலை, இடதுபுறமாக சைதாப்பேட்டை வலது புறமாக தேனாம்பேட்டை ஆகிய 3 பக்கமும் செல்லலாம்.
தேனாம்பேட்டை செல்லும் வாகனங்களும் வழக்கம் போல் அனுமதிக்கப்படும். வருகிற 3-ந்தேதி முதல் இந்த மாற்றம் செயல்படுத்தப்பட உள்ளது.
சென்னையில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை வழித்தடம் அமைப்பதற்கான பணி 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.
இதனால் அண்ணாசாலை பகுதியில், மெட்ரோ ரெயில் சுரங்கம் அமைப்பதற்காக எல்.ஐ.சி.யில் இருந்து ஸ்பென்சர் வழியாக செல்லும் அண்ணாசாலை மூடப்பட்டது. இதையடுத்து, இந்த வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள், ஜெனரல் பேட்டர்ஸ் சாலை, ஒயிட்ஸ் சாலை, எக்ஸ்பிரஸ் அவென்யூ, சத்யம் தியேட்டர் வழியாக அண்ணாசாலை சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனால் அண்ணா சாலை வழியாக செல்ல வேண்டியவர்கள் அதிக தூரம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டது. ராயப்பேட்டை மணிக்கூண்டு பகுதியில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அண்ணா மேம்பாலத்தில் இருந்து சிம்சன் நோக்கி செல்லும் எதிர்பாதை மட்டும் ஒரு வழிசாலையாக இயங்கி வந்தது.
இந்த நிலையில், அண்ணாசாலை, பகுதியில் மெட்ரோ சுரங்கம் அமைக்கும் பணி முடிந்து ரெயில்கள் இயங்கத் தொடங்கின. என்றாலும் சில இடங்களில் சாலை விரிவாக்கம் மற்றும் சீரமைப்பு பணிகள் நடந்து வந்தன.
தற்போது அந்த பணிகளும் முடிந்துவிட்டன. இதனால் 10 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா சாலை மீண்டும் இரு வழிச் சாலையாக மாற்றப்படுகிறது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நந்தனம்- அண்ணா சாலை சந்திப்பில் மெட்ரோ ரெயில் பாதை பணிகளுக்காக 2011-ம் ஆண்டு போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. பணிகள் நிறைவடைந்ததால் கடந்த 27-ந்தேதி சோதனை முறையில் மீண்டும் அண்ணா சாலையில் பழைய முறையில் போக்குவரத்து இருவழியாகவும் அனுமதிக்கப்பட்டது. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
எனவே, மீண்டும் பழைய முறைப்படி அண்ணா சாலையில் போக்குவரத்து நடைபெற உள்ளது. இதன்படி அண்ணா சாலையில் சைதாப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை வரும் அனைத்து வாகனங்களும் நந்தனம் சந்திப்பில் நேராகவும், இடதுபுறம் திரும்பி வெங்கட் நாராயணா சாலை வழியாகவும் வலது புறம் திரும்பி சேமியர்ஸ் சாலை வழியாகவும் செல்லலாம்.
வெங்கட்நாராயணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் சேமியர்ஸ் சாலையில் நேராகவும், அண்ணா சாலையில் இடது புறம், சைதாப்பேட்டைக்கு வலதுபுறமும் செல்லலாம். இதுபோல சேமியர்ஸ் சாலையில் இருந்து நேராக வெங்கட்நாராயணா சாலை, இடதுபுறமாக சைதாப்பேட்டை வலது புறமாக தேனாம்பேட்டை ஆகிய 3 பக்கமும் செல்லலாம்.
தேனாம்பேட்டை செல்லும் வாகனங்களும் வழக்கம் போல் அனுமதிக்கப்படும். வருகிற 3-ந்தேதி முதல் இந்த மாற்றம் செயல்படுத்தப்பட உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X