என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சம்பளம் வழங்க கோரி 27-வது நாளாக பாசிக் ஊழியர்கள் தர்ணா
Byமாலை மலர்23 July 2019 3:05 PM GMT (Updated: 23 July 2019 3:05 PM GMT)
புதுவை பாசிக்கில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கோரி 27-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
புதுவை பாசிக்கில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்க வேண்டும். 55 மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும்.
தினக்கூலிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வேளாண்துறை இயக்குனரை வேறு துறைக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கத்தினர் பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த 26-ந்தேதி முதல் அவர்கள் தொடர் போராட்டத்தினை தொடக்கி உள்ளனர்.
தர்ணா, கண்டன ஆர்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம், வயிற்றில் ஈரத்துணி கட்டி போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 27-வது நாளாக பாசிக் தலைமை அலுவலத்தில் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில பொதுசெயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். பாசிக் சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் முத்துராமன், பொருளாளர் தரணிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயல் தலைவர் அபிஷேகம், தலைவர் தினேஷ் பொன்னையா மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுக்கு நிலுவையில் உள்ள 55 மாத சம்பளத்தை வழங்க கோரி கோஷங்களை எழுப்பினர்.
புதுவை பாசிக்கில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்க வேண்டும். 55 மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும்.
தினக்கூலிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வேளாண்துறை இயக்குனரை வேறு துறைக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கத்தினர் பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த 26-ந்தேதி முதல் அவர்கள் தொடர் போராட்டத்தினை தொடக்கி உள்ளனர்.
தர்ணா, கண்டன ஆர்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம், வயிற்றில் ஈரத்துணி கட்டி போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 27-வது நாளாக பாசிக் தலைமை அலுவலத்தில் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில பொதுசெயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். பாசிக் சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் முத்துராமன், பொருளாளர் தரணிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயல் தலைவர் அபிஷேகம், தலைவர் தினேஷ் பொன்னையா மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுக்கு நிலுவையில் உள்ள 55 மாத சம்பளத்தை வழங்க கோரி கோஷங்களை எழுப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X