என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை - 3 கடைகளுக்கு அபராதம்
Byமாலை மலர்19 Jun 2019 5:58 PM GMT (Updated: 19 Jun 2019 5:58 PM GMT)
கோத்தகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கோத்தகிரி:
கோத்தகிரி நகரில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கண்ணன் தலைமையில் ஊழியர்கள் சோதனை மேற்கொண்டனர். கோத்தகிரி டானிங்டன், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடந்தது. அப்போது 3 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனைக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது குறித்து சுகாதார ஆய்வாளர் கண்ணன் கூறும்போது, கோத்தகிரி நகரில் பிளாஸ்டிக் குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரும்பாலும் துணிப்பையை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இறைச்சி கடைகளில் வாழை இலை பயன்படுத்தப்படுகிறது. தற்போது குளிர்பானம், தண்ணீர் ஆகியவை விற்பனை செய்யப்படும் சிறிய பிளாஸ்டிக் பாட்டில்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே அவற்றையும் தவிர்த்து பிளாஸ்டிக் தடை உத்தரவை செயல்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்றார்.
கோத்தகிரி நகரில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கண்ணன் தலைமையில் ஊழியர்கள் சோதனை மேற்கொண்டனர். கோத்தகிரி டானிங்டன், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடந்தது. அப்போது 3 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனைக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது குறித்து சுகாதார ஆய்வாளர் கண்ணன் கூறும்போது, கோத்தகிரி நகரில் பிளாஸ்டிக் குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரும்பாலும் துணிப்பையை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இறைச்சி கடைகளில் வாழை இலை பயன்படுத்தப்படுகிறது. தற்போது குளிர்பானம், தண்ணீர் ஆகியவை விற்பனை செய்யப்படும் சிறிய பிளாஸ்டிக் பாட்டில்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே அவற்றையும் தவிர்த்து பிளாஸ்டிக் தடை உத்தரவை செயல்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X