search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரணி அருகே மணலில் புதைந்து வாலிபர் பலி - உறவினர்கள் சாலை மறியல்
    X

    ஆரணி அருகே மணலில் புதைந்து வாலிபர் பலி - உறவினர்கள் சாலை மறியல்

    ஆரணி அருகே மணலில் புதைந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து அவர்களது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஆரணி:

    ஆரணி கமண்டலநாகநதி ஆற்று படுகையில் லாரிகளிலும், மாட்டு வண்டிகளிலும் இரவு பகல் என மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஆரணி அடுத்த சேவூர் காலனி பகுதியை சேர்ந்தவர் சங்கர் இவரது மகன் சரவணன் (வயது 28). இவர் நேற்று கமண்டடலநாகநதி ஆற்றில் மணல் அள்ளி கொண்டிருந்தார்.

    அப்போது மணல் சரிந்து சரவணன் மீது விழுந்தது. இதில் அவர் மண்ணுக்குள் புதைந்தார். இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்க போராடினர். ஆனால் சம்பவ இடத்திலேயே சரவணன் மூச்சுதிணறி இறந்தார்.இதையடுத்து உறவினர்கள் சரவணன் உடலை அவரது வீட்டிற்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய முயன்றனர்.

    இது குறித்து தகவலறிந்த ஆரணி டி.எஸ்.பி. செந்தில் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பிரேத பரிசோதனை செய்து விசாரணை நடத்த வேண்டும் என கூறினர்.

    இதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது சரவணன் உடல் நலகுறைவால் தான் இறந்தான், மணலில் புதைந்து சாகவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்து உடலை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தியே ஆகவேண்டும் என மீண்டும் கூறினர்.

    இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஆரணி வேலூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்துரு பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். பின்னர் உடலை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த மாதம் முனியங்குடிசை பகுதியை சேர்ந்த பார்த்திபன் மகன் வெற்றிவேல் (14) என்ற சிறுவன் மணல் சரிந்து இறந்தான் என்பது குறிப்பிடதக்கது.
    Next Story
    ×