என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் வீட்டு ஏ.சி. எந்திரத்துக்குள் 3 மாதமாக குடியிருந்த பாம்பு
Byமாலை மலர்13 Jun 2019 5:05 AM GMT (Updated: 13 Jun 2019 7:54 AM GMT)
புதுவையில் வீட்டு ஏ.சி. எந்திரத்துக்குள் 3 மாதமாக குடியிருந்த பாம்பை வனத்துறையினர் லாவகமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
புதுச்சேரி:
புதுவை தேங்காய்திட்டு சாய் ஜீவா சரோஜினி நகரை சேர்ந்தவர் ஏழுமலை.
புதுவை அரசின் சமூக நலத்துறையில் பணியாற்றும் ஏழுமலை தனது வீட்டின் படுக்கை அறையில் உள்ள ஏ.சி.யை போட்டுள்ளார். அப்போது ஏ.சி. எந்திரத்தில் இருந்து வழக்கத்துக்கு மாறாக சத்தம் வந்துள்ளது.
இதனால் ஏ.சி. பழுதாகி இருக்கலாம் என கருதி நிறுத்தி விட்டார். அதோடு ஏ.சி.யை பழுது நீக்க மெக்கானிக்கை அழைத்தார். நேற்று காலை ஏழுமலை வீட்டுக்கு வந்த மெக்கானிக் ஏ.சி.யை கழற்றி பார்த்தார்.
அப்போது எந்திரத்துக்குள் 2 பாம்பு தோல்கள் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த மெக்கானிக் ஏ.சி.யின் கீழ் பகுதியில் டார்ச் லைட் அடித்து பார்த்துள்ளார்.
இதில் ஏ.சி.யின் மறைவான பகுதியில் பாம்பு ஒளிந்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து மெக்கானிக் வீட்டு உரிமையாளர் ஏழுமலையிடம் தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து வனத்துறையில் பாம்பு பிடிக்கும் நபர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை ஊழியர்கள் 2 பேர் ஏ.சி. எந்திரத்துக்குள் மறைந்திருந்த பாம்பை மீட்க ஒரு மணி நேரம் போராடினர்.
போராட்டத்தின் இறுதியில் ஏ.சி. எந்திரத்துக்குள் பதுங்கி இருந்த 2 அடி நீளமுள்ள சாரை பாம்பு பிடிபட்டது. இதனை லாவகமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
எந்திரத்தின் துளைக்கு அருகிலேயே மரம் உள்ளது. இது, பாம்புக்கு வசதியாக அமைந்து விட்டது. இதனால் பாம்பு வெளியில் சென்று இரையெடுத்து பின்னர் மீண்டும் எந்திரத்துக்குள் வந்து தங்கி உள்ளது.
குறைந்தது 3 மாத காலமாக ஏழுமலை வீட்டில் விருந்தாளியாக பாம்பு தங்கி இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
ஏனெனில், ஏ.சி. எந்திரத்துக்குள் 2 முறை பாம்பு தோல் உரித்துள்ளது. இதன் மூலம் குறைந்தபட்சம் 3 மாத காலம் பாம்பு ஏ.சி. எந்திரத்துக்குள் இருந்திருக்கலாம் என வனத்துறையினர் உறுதி செய்கின்றனர்.
புதுவை தேங்காய்திட்டு சாய் ஜீவா சரோஜினி நகரை சேர்ந்தவர் ஏழுமலை.
புதுவை அரசின் சமூக நலத்துறையில் பணியாற்றும் ஏழுமலை தனது வீட்டின் படுக்கை அறையில் உள்ள ஏ.சி.யை போட்டுள்ளார். அப்போது ஏ.சி. எந்திரத்தில் இருந்து வழக்கத்துக்கு மாறாக சத்தம் வந்துள்ளது.
இதனால் ஏ.சி. பழுதாகி இருக்கலாம் என கருதி நிறுத்தி விட்டார். அதோடு ஏ.சி.யை பழுது நீக்க மெக்கானிக்கை அழைத்தார். நேற்று காலை ஏழுமலை வீட்டுக்கு வந்த மெக்கானிக் ஏ.சி.யை கழற்றி பார்த்தார்.
அப்போது எந்திரத்துக்குள் 2 பாம்பு தோல்கள் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த மெக்கானிக் ஏ.சி.யின் கீழ் பகுதியில் டார்ச் லைட் அடித்து பார்த்துள்ளார்.
இதில் ஏ.சி.யின் மறைவான பகுதியில் பாம்பு ஒளிந்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து மெக்கானிக் வீட்டு உரிமையாளர் ஏழுமலையிடம் தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து வனத்துறையில் பாம்பு பிடிக்கும் நபர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை ஊழியர்கள் 2 பேர் ஏ.சி. எந்திரத்துக்குள் மறைந்திருந்த பாம்பை மீட்க ஒரு மணி நேரம் போராடினர்.
போராட்டத்தின் இறுதியில் ஏ.சி. எந்திரத்துக்குள் பதுங்கி இருந்த 2 அடி நீளமுள்ள சாரை பாம்பு பிடிபட்டது. இதனை லாவகமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
ஏ.சி.யின் வெளிப்புற அவுட்டோர் யூனிட்டில் இருந்து வரும் பைப் லைனை சரியாக அடைக்காமல் இருந்துள்ளது. இதனால் அந்த வழியாக பாம்பு ஏ.சி. எந்திரத்துக்குள் புகுந்துள்ளது.
குறைந்தது 3 மாத காலமாக ஏழுமலை வீட்டில் விருந்தாளியாக பாம்பு தங்கி இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
ஏனெனில், ஏ.சி. எந்திரத்துக்குள் 2 முறை பாம்பு தோல் உரித்துள்ளது. இதன் மூலம் குறைந்தபட்சம் 3 மாத காலம் பாம்பு ஏ.சி. எந்திரத்துக்குள் இருந்திருக்கலாம் என வனத்துறையினர் உறுதி செய்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X