search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாப்பாரப்பட்டி அருகே பால் வேன் மோதி உரக்கடை உரிமையாளர் பலி
    X

    பாப்பாரப்பட்டி அருகே பால் வேன் மோதி உரக்கடை உரிமையாளர் பலி

    பாப்பாரப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது பால் வேன் மோதிய விபத்தில் உரக்கடை உரிமையாளர் பலியானார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்துள்ள எட்டியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது58). இவர் உரக்கடை நடத்தி வருகிறார்.

    தனது மோட்டார் சைக்கிளில் தமிழ்செல்வன் பாலக்கோட்டில் இருந்து தருமபுரிக்கு சென்று கொண்டிருந்தார். சோகத்தூர் கூட்ரோடு அருகே வந்த போது எதிரே வந்த பால்வேன் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தமிழ்செல்வனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு ஆம்புலன்சில் கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×