search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோயம்பேட்டில் மாநகர பஸ்சில் பெண்ணிடம் ரூ. 1லட்சம் கொள்ளை
    X

    கோயம்பேட்டில் மாநகர பஸ்சில் பெண்ணிடம் ரூ. 1லட்சம் கொள்ளை

    கோயம்பேட்டில் இருந்து மணலி செல்லும் மாநகர பஸ்சில் பெண்ணிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
    போரூர்:

    சீர்காழி திருமுல்லைவாசல் இருதய நகரைச் சேர்ந்தவர் சோனைமுத்து. இவரது மனைவி கல்யாணி. இவர் சென்னை மணலியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை சென்னை வந்தார். பின்னர் இரவு கோயம்பேட்டில் இருந்து மணலி செல்வதற்காக மாநகர பஸ்சில் (எண் 121ஏ) ஏறி அமர்ந்தார்.

    பஸ் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் சென்றதும் தான் வைத்திருந்த கைப்பை கிழிந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர்கள் பிளேடால் பையை கிழித்து அதிலிருந்த ரூ.1 லட்சம் பணம் மற்றும் 2 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
    Next Story
    ×