search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 29-ந் தேதி நடக்கிறது
    X

    தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 29-ந் தேதி நடக்கிறது

    தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 29-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜனவரி மாத விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 29-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக தரை தளத்தில் அமைந்துள்ள பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் எனது தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் புதிய வேளாண்மை தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு திட்ட விளக்கம் அளிக்கப்பட உள்ளது. மேலும், கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் நீர்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தோட்டக்கலைத்துறை போன்ற விவசாயம் சார்ந்த கருத்துகளை மட்டும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க விரும்புவோர் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    இவ்வாறு கலெக்டர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
    Next Story
    ×