என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிவாரண பணிகள் மேற்கொள்ள கூடுதலாக 11 அமைச்சர்கள் நியமனம்- எடப்பாடி பழனிசாமி உத்தரவு
Byமாலை மலர்18 Nov 2018 5:04 AM GMT (Updated: 18 Nov 2018 5:04 AM GMT)
கஜா புயுலால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கூடுதலா 11 அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். #Gaja #GajaCyclone
சென்னை:
‘கஜா’ புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சாய்ந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியும், மின் கம்பங்களை மாற்றி அமைக்கும் பணியும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
இதில் நாகை மாவட்டத்தில் அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் முகாமிட்டு நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் திண்டுக்கல் சீனிவாசன், தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, வேலுமணி, வைத்திலிங்கம் எம்.பி., ஆகியோரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் முகாமிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள்.
புயல் பாதித்த மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க கூடுதலாக 11 அமைச்சர்களை நியமித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி நாகை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் கே.பி. அன்பழகன், எம்.சி. சம்பத், பெஞ்சமின் ஆகியோரும், தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்துக்கு அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோரும், புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.சி. கருப்பணன், பாஸ்கரன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அந்தந்த மாவட்டங்களில் ஏற்கனவே முகாமிட்டுள்ள அமைச்சர்களுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, பால், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
‘கஜா’ புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சாய்ந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியும், மின் கம்பங்களை மாற்றி அமைக்கும் பணியும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
இதில் நாகை மாவட்டத்தில் அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் முகாமிட்டு நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் திண்டுக்கல் சீனிவாசன், தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, வேலுமணி, வைத்திலிங்கம் எம்.பி., ஆகியோரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் முகாமிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள்.
புயல் பாதித்த மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க கூடுதலாக 11 அமைச்சர்களை நியமித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி நாகை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் கே.பி. அன்பழகன், எம்.சி. சம்பத், பெஞ்சமின் ஆகியோரும், தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்துக்கு அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோரும், புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.சி. கருப்பணன், பாஸ்கரன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அந்தந்த மாவட்டங்களில் ஏற்கனவே முகாமிட்டுள்ள அமைச்சர்களுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, பால், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X